Tuesday, April 7, 2015

மனித உடை.

 லட்சக்கணக்கான  ஆண்டுகளாக,  மனிதன்  உடை  இல்லாமல்  பிறந்த  மேனியோடுதான்  வளைய  வந்தான்.  5,000  ஆண்டுகளாகத்தான்  உடை  அணிகிறோம்! ( செக்ஸ்  உறுப்புகளை  மட்டும்  மூடிக்கொள்வது  அதற்கு  முன்பே  வந்துவிட்டது.  கோவணம்தான்  முதல்  உடை !)
      உடை  அணிய  மூன்று  அடிப்படைக்  காரணங்கள்  உண்டு.  அதை  சி.எம்.டி.  என்கிறார்கள்  ( Comfort,  Modesty,  Display ).  பிரபல  மனித  இயல்  ஆய்வாளர்  டெஸ்மாண்ட்  மாரீஸ்  இது  பற்றி  விவரமாகவும்  சுவையாகவும்  ' பீப்பிள்  வாட்சிங் ' ( People  Watching ) என்கிற  புத்தகத்தில்  எழுதி  இருக்கிறார்.
-- ஹாய்  மதன் .  கேள்வி  -  பதில்.
-- ஆனந்த விகடன் .  9 - 5 - 2012.  

No comments: