Sunday, April 5, 2015

தீபாவளி.

*  ஐப்பசி  மாதம்  கிருஷ்ணபட்சம்  சதுர்தசி  திதியில்  வரும்  திருநாளே  தீபாவளி.
*  தீபாவளி  தினம்  ஒன்றில்தான்  குபேரன்,  சிவபெருமானை  வழிபட்டு  செல்வங்களனைத்தையும்  பெற்றான்.
*  பவிஷ்யோத்ர  புராணம்  தீபாவளி  என்றும்;  காமசூத்ரா  கூராத்ரி  எனவும்;  காலவிவேகம்,  ராஜமார்த்தாண்டம்  ஆகிய  நூல்கள்  சுபராத்ரி  எனவும்
   தீபாவளியைக்  குறிப்பிடுகின்றன.
*  ஒரே  மூலவரை  நாராயணர்,  விநாயகர்,  சிவபெருமான்,  பார்வதி  என  வெவ்வேறு  தெய்வங்களாக  வழிபடும்  பழக்கம்  பூரிஜகன்நாதர்  ஆலயத்தில்
   உள்ளது.
*  அம்பிகை  வழிபாடு  ஆதி  காலத்தில்  இருந்து  வழக்கத்தில்  உள்ளது.  நாமப்பிரியையான  அம்பாளுக்கு  ஆயிரமாயிரம்  திருநாமங்கள்  உண்டு  என்பதும்
   அனைவரும்  அறிந்த  விஷயம்.
*  பஞ்சபூதங்களுமே  நம்  வாழ்வோடு  ஏதோ  வகையில்  பின்னிப்  பிணைந்துதான்  இருக்கின்றன.  அவற்றுள்  நீர்  ஒருபடி  மேலாக  ' தீர்த்தம் '  என்ற
   பெயரில்  உயர்வுபடுத்தப்பட்டு  போற்றப்படுகிறது.
*  வண்னத்துப்  பூச்சியை  நீங்களாகப்  பிடித்தால்,  அதன்  வண்ணம்  உங்கள்  கையில்  ஒட்டும்.  அதுவாக  வந்து  அமர்ந்தால்  ஒட்டாது.
* ' விருந்தோம்பல் '  என்பது  நமது  நாட்டின்  பண்பாட்டின்  சின்னம்.  " அதிதி  தேவோ  பவ !"  என்கிறது  வடமொழி  நன்னெறி.  விருந்தாளியை
    தெய்வமாகவே  மதித்திடு  என்பதுதான்  அதன்  பொருள்.
-- குமுதம்  பக்தி ஸ்பெஷல்.  நவம்பர்  1 - 15,  2012..

No comments: