Saturday, April 4, 2015

" அட, இப்படியும்..."

" அட,  ஒரு  விஷயத்தை   இப்படியும்  பார்க்க  முடியுமா?"  என்று  சமீபத்தில்  வியந்தது  எதற்கு?"
     " எழுத்தாளர்  பட்டுக்கோட்டை  பிரபாகரின்  மாமனார்,  வழக்கறிஞர்  முத்துநாராயணன்  ஒரு  பெரியாரிஸ்ட்.  அவர்  பெரியாரோடு  பழகிய  அனுபவங்கள்,  பெரியாரின்  சிந்தனைகள்,  அவர்  வாழ்க்கையில்  நடந்த  சம்பவங்கள்  ஆகியவற்றை  பட்டுக்கோட்டை  பிரபாகர்  தொகுத்து,  ' பெரியார்  ஒரு  தீவிரவாதி '  என்ற  தலைப்பில்  வெளியிட்டு  இருக்கிறார்.  அதில்  ஒரு  சம்பவம்... பெரியார்  திருச்சியில்  பேசும்போது,  ' போரில்  ராவணன்  ஆயுதத்தை  இழந்து  நிராயுதபாணியாக  நிற்கும்போது,  ' இன்று  போய்  நாளை  வா'னு  சொன்னதைப்  பெருந்தன்மையாச்  சொல்றாங்க.  ரெண்டு  பேருக்குச்  சண்டை  வந்து  ஆயுதங்களை  இழந்துட்டா,  அடுத்து  கைச்  சண்டைதான்.  மல்யுத்தம்தான்  நடக்கும்.  ராவணன்  உருவத்துல  பெரியவன்.  அதனாலதான்  மல்யுத்தத்துக்குப்  பயந்து  ராமன்,  ' இன்று  போய்  நாளை  வா'னு  சொன்னான் '  என்றாராம்  பெரியார்.  இது  எப்படி  இருக்கு?"
-- இரா.மங்கையர்கரசி,  கோயம்புத்தூர். ( நானே  கேள்வி...நானே  பதில்! )
-- ஆனந்தைகடன் .  7 - 11 - 2012. 

No comments: