Monday, April 27, 2015

தாலாட்டு.

தாலாட்டு  பாடி  குழந்தைகளைத்  தூங்கவைக்கும்  ' மம்மி ' கள்  இப்போது  இருக்கிறார்களா?
     அரசருக்குப்  பிறந்தாலும்  அரச  மரத்தடியில்  பிறந்தாலும் தாலாட்டு  பாடி  குழந்தைகளைத்  தூங்கவைப்பது  என்பது  அழியாமல்,  உலகின்  கடைசி  தாய்  இருக்கும்  வரை  தொடரும்.
     ருமேனியத்  தாய் ' ஹையா...ஹையா...மைக்கா  பையா...'  என்று  தாலாட்டை  ஆரம்பிக்கிறாள்.  செக்  நாட்டில்  தாலாட்டு ' ஹூல்லி  பேபி...'  எனத்  தொடங்கும்.  கிரேக்கர்கள்  ' நானி...நானி...என்  பாப்பா...' என்றும்,  துருக்கியில்  ' ஹூஹூ ஹூஹூ  பேபி...' என்றும்,  நாம் ' லுலுலுலுவாயி...' என்றும்,  தாலாட்டுகிறோம். 4,000  ஆண்டுகளுக்கு  முன்பு  ஒரு  தாய்  குழந்தையைத்  ' தூக்கமே  வா!  என்  குழந்தையைத்  தூங்க  வை.  சீக்கிரம்  வா...பளிச்சிடும்  அவன்  கண்களை  என்  விரல்களால்  மெள்ள  மூடுகிறேன்...  தூக்கமே  வா!  அவன்  உதடுகள்  எதையோ  முணுமுணுக்கின்றன... அந்த  முணுமுணுப்பு  அவனைத்  தூக்கத்தில்  இருந்து  எழுப்பிவிடாமல்... தூக்கமே  வந்து  சேரு!'  என்கிற  அர்த்தத்தில்  தாலாட்டு  பாடி  இருக்கிறாள்.  சுமேரியாவில்  அந்தத்  தாய்  பாடிய  பாடல்  நமக்குக்  கிடைத்திருக்கிறது.
-- ஹாய்  மதன்.  கேல்வி...பதில்.
-- ஆனந்த விகடன்.2 .5 . 2012.  

No comments: