Wednesday, April 22, 2015

துணுக்கு மேடை.

*  வள்ளுவர்  எப்படி  இருப்பார்  என்று  தெரியாத  நிலையில்,  வள்ளுவருக்கு  உருவம்  கொடுத்தவர்  வேணுகோபால்  சர்மா.
*  தாமஸ்  ஆல்வா  எடிசன்  பள்ளிக்கூடத்தில்  படித்தது  மூன்றே  மாதங்கள்தான்.  எடிசனின்  ஆசிரியர்,  இவனுக்கு  தலையில்  மூளை  இல்லை,
   களிமண்தான்  இருக்கிறது  என்று  சொன்னாராம்.  ஆசிரியரின்  கணிப்பை  பொய்யாக்கி  1000 க்கும்  அதிகமான  சாதனைகளை  கண்டுபிடித்தார்  எடிசன்.
*  இந்தியாவில்  பெண்கள்  காவல்  நிலையம்  முதன்முதலில்  கேரள  மாநிலத்தில்  கோழிக்கோடு  நகரத்தில்  1973ம்  ஆண்டு  தொடங்கப்பட்டது.
*  தமிழ்நாட்டில்  அமைக்கப்பட்ட  முதல்  நீர்மின்  திட்டம் ' பைக்காரா '.  இது  1929ல்  தொடங்கி  மூன்று  கட்டங்களாக  1956ல்  கட்டி  முடிக்கப்பட்டது.
   3080  அடி  உயரத்தில்  இருந்து  விழும்  நீரைக்  கொண்டு  இங்கு  மின்சாரம்  உற்பத்தி  செய்யப்படுகிறது.
--- தினமலர்.  பெண்கள் மலர்.  நவம்பர்  17,  2012. 

No comments: