Saturday, April 18, 2015

துறவியின் உணவு.

  தேங்காய்க்  குடுக்கை,  சுரைக்  குடுக்கை,  தொன்னை,  மூங்கில்  படி,  மட்கலம்,  மரஓடு  இவை  துறவியின்  பாண்டங்கள்.  பொன்,  வெள்ளி,  செம்புப்  பாத்திரங்கள்  கூடாது.  தம்  பாண்டத்தை  வேள்விக்  கலமெனப்  போற்றி,  நீராலும்  மண்ணாலும்  அன்றாடம்  துலக்குக.
      நெருப்பு  மூட்டி  சமைத்துண்ணற்க.  பிச்சைக்குக்  கிராமத்துள்  செல்க.  பிரம்மச்சாரி,  வனப்பிரஸ்தர்  பிச்சைக்காகக்  காத்திருக்கையில்  துறவியும்  சென்று  நிற்கக்  கூடாது.  பறவையும்,  நாயும்  சோறுண்ணும்  இடத்திலும்  நிற்கக்  கூடாது.
      உலக்கைச்  சத்தம்  கேட்காத,  அடுப்பு  எரிந்து  கொண்டிராத,  புகை  நின்ற  இல்லம்  நாடுக.  விருந்தினர்  உண்டான  பின்  பிச்சை  கொள்க.
      ஒரே  வேளை  உண்ணுக.  அதிக  உணவு  காமம்  வளர்க்கும்.
---காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு.

No comments: