Tuesday, April 14, 2015

சிறுநீரில் மின்சாரம்.

சிறுநீரில்  இருந்து  மின்சாரம்.--  நைஜீரிய  சிறுமிகள் சாதனை.
     சிறுநீர்  மூலம்  ஜெனரேட்டரை  இயக்கி  மின்சாரம்  தயாரிக்கும்  தொழில்நுட்பத்தை, ஆப்பிரிக்க  நாடுகளில்  ஒன்றான நைஜீரியாவை  சேர்ந்த  14,15  வயது  இளம்பெண்கள் 3  பேர்  கண்டுபிடித்துள்ளனர்.
     இதுகுறித்து  அந்த  பெண்கள்  கூறுகையில்,  ' சிறுநீரை  முதலில்  எலக்டோலைட்டிக்  செல்லுக்குள்  செலுத்தி  சிறுநீரில்  இருக்கும்  யூரியா  உடைக்கப்பட்டு  நைட்ரஜன்,  தண்ணிர்,  ஹைட்ரஜன்  என  3  ஆக  பிரிக்கப்படும்.  இதில் ஹைட்ரஜனை  மட்டும்  தண்ணீர்  வடிகட்டி  வழியாக  செலுத்தி  சுத்தப்படுத்தப்படும்.
     சுத்திகரிக்கப்பட்ட   ஹைட்ரஜனை  போராக்ஸ்  திரவம்  நிரப்பப்பட்ட  சிலிண்டருக்குள்  செலுத்தும்போது  உருவாகும்   ஹைட்ரஜன்  வாயுவை  மின்  உற்பத்தி  செய்யும்  ஜெனரேட்டரில்  செலுத்தி  ஜெனரேட்டரை  இயக்கலாம்.  ஒரு  லிட்டர்  சிறுநீர்  மூலம்  6  மணிநேரம்  ஜெனரேட்டரை  இயக்கி  மின்சாரம்  தயாரிக்க  முடியும்'  என்றனர்.
-- தினமலர்,  12 - 11 - 2012.  

No comments: