Sunday, April 12, 2015

மருத்துவம்.

  மருத்துவத்தில்  இரண்டு  வகைகள்  உண்டு.  வருமுன்  காப்பது,  வந்தபின்  சிகிச்சை.  சொல்லுங்கள் ...இதில்  முதல்  வகை  மருத்துவம்தானே  சிறந்தது!
    ' ப்ரிவென்ஷன்  ஈஸ்  பெட்டர்  தென்  க்யூர் '  ( Prevention  is  better  than  cure )  என்பது  ஆங்கிலப்  பழமொழி.  இதைவிடக்  கடுமையான  சீனப்பழமொழி  ஒன்று  உண்டு.  The  superior  doctor  prevents  sickness;  The  mediocre  doctor  attends  to  impending  sickness;  The  inferior  doctor  treats  actual  sickness.  அதாவது,  உயர்தர  மருத்துவர்  வியாதி  வராமல்  தடுப்பார்;  நடுத்தர  மருத்துவர்  வரப்போகும்  நோய்க்கு  வைத்தியம்  செய்வார்;  கீழ்த்தர  மருத்துவர்தான்  வந்துவிட்ட  நோய்க்கு  வைத்தியம்  செய்வார்.
     இதையேதான்  தாமஸ்  எடிசன்  என்கிற  பிரபல  மருத்துவ  அறிஞர்  இப்படிக்  கூறுகிறார்...The  Doctor  of  the  future  will  give  no  medicine  -- but  will  concentrate  in  diet  and  preventive  aspects.  '  எதிர்கால  மருத்துவர்  மருந்துகள்  கொடுக்கமாட்டார்  --  நோயைத்  தடுப்பதிலும்  உணவு  முறைகளிலுமே  கவனம்  செலுத்துவார் '  என்கிறார்.
     ஆக,  வரும்  முன்  காப்பதே  சிறந்த  மருத்துவ  முறை  என்பதைத்தான்  அறிஞர்கள்  வலியுறுத்துகிறார்கள்.
-- பி.சௌந்தரபாண்டியன்,   அவள் விகடன்,  20 -11 - 2012.  தீபாவளி  ஸ்பெஷல்.
-- இதழ் உதவி: N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் .  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி ).  

No comments: