Friday, March 27, 2015

அழகான வீடு.

  ஒரு  வீடு  அழகாக,  பளிச்சென்று  இருந்தாலே  அமைதியும்,  மகிழ்ச்சியும்  அந்த  குடும்பத்தைத்  தேடி  வரும்.  உங்கள்  வீடு  அழகாகவும்,  மகிழ்ச்சியாகவும்  இருக்க  சில  டிப்ஸ்கள்:
*  பூசணிக்காய்  சாற்றில்  தங்கநகைகளை  ஊறவைத்துக்  கழுவினால்  அவை  நன்றாக  பளிச்சிடும்.
*  பாத்ரூம்  டைல்ஸ்களில்  படிந்திருக்கும்  துருப்பிடித்த  கறைகளை  நீக்க  கெரசினை  உபயோகிக்கலாம்.
*  எலுமிச்சை,  ஆரஞ்சு  தோல்களை  அலமாரியில்  வைத்தால்  சிறு  பூச்சிகள்  அண்டாது.
*  குளிர்சாதனப்பெட்டியை  துடைக்கும்போது  பச்சைக்கற்பூரம்  கலந்த  நீரில்  துடைத்தால்  பூச்சிகள்,  சிறுவண்டுகள்  நுழையாது.
*  பட்டுச்  சேலைகளைத்  துவைக்கும்போது  அலசும்  நீருடன்  சிறிது  எலுமிச்சைச்  சாறு  கலந்து  கொண்டால்  சாயம்  போகாது,  மங்காது.
*  உலோக  ஃபர்னிச்சர்களில்  இருக்கும்  துருபிடித்த  கறையைப்  போக்க  டர்பண்டைன்  பயன்படுத்தித்  துடைக்க  வேண்டும்.
*  குளியலறைக்  கதவுகளில்  திட்டுத்  திட்டாக  படிந்திருக்கும்  சோப்பு  கறைகளை  நீக்க  வெள்ளை  வினிகரை  ஸ்பாஞ்சில்  தொட்டுத்  துடைக்க
   வேண்டும்..
*  நிறம்  மங்கிப்போன  லெதர்  பர்ஸ்,  பெல்ட்  மற்றும்  ஹேண்ட்  பேக்குகளை  கிளிசரினில்  ஸ்பாஞ்  தோய்த்துத்  துடைத்தால்  நன்கு  பளபளப்பாக  மாறும்.
-- சத்யா  சுரேஷ்,  குமுதம் .  24 - 10 - 2012. 

No comments: