Sunday, March 22, 2015

கண் அசைவில் செல்போன்

வந்தாச்சு  புது  சாப்ட்வேர்  --  கண்  அசைவில்  செல்போன்
      கண்  அசைவினால்  டேப்லட்  பிசி  மற்றும்  செல்போன்களை  கட்டுப்படுத்தும்  சாப்ட்வேரை  டென்மார்க்  நிறுவனம்  உருவாக்கியுள்ளது.
      இந்த  சாப்ட்வேர்  இன்பிராரெட்டை  பயன்படுத்தி  இயங்குகிறது.  இந்த  கதிர்  கண்ணின்  மணியில்  பட்டு  எதிரொலிக்கும்போது,  அதை  சாதனத்தின்  காமிரா  மூலம்  படம்  பிடித்துக்  கொள்ளுமாம்.  இதன்  மூலம்  வாடிக்கையாளரின்  பார்வை  மூலமாகவே  திரையில்  தோன்றும்  பக்கத்தை  ஸ்குரோல்  செய்யவோ  அல்லது  கிளிக்  செய்யவோ  இயலும்  என  தெரிகிறது.  உதாரணமாக  செல்போன்  அல்லது  டேப்லட்  பிசி  சாதனத்தில்  வாடிக்கையாளர்கள்  இ - புக்  படிக்கும்போது,  அந்த  பக்கத்தின்  கடைசி  பகுதியை  பார்க்க  விரும்புகிறார்கள் என்றால்,  அதை  கண்கள்  மூலமாகவே  தெரிந்துகொண்டு  அதற்கு  ஏற்ப,  அந்த  பக்கத்தின்  கீழ்  பகுதிக்கு  ஸ்குரோல்  ஆகவும்,  தேவையென்றால்  பக்கத்தை  திருப்பவும்  இது  பயன்படும்  வகையில்  இந்த  சாப்ட்வேர்  உருவாக்கப்பட்டுள்ளது.
--- தினமலர்.  28 - 10 - 2012 . 

No comments: