Monday, March 2, 2015

எட்டு வகை மணம்.

பிராமம்,  தெய்வம்,  ஆருசம்,  பிரஜாபத்யம்,  ஆசுரம்,  காந்தருவம்,  ராட்சசம்,  பைசாசம்  என்று  திருமணம்  எட்டு  வகை.
வேதமறிந்த,  ஒழுக்கமுடைய,  மணமாகாதவனுக்கு  பெண்ணைத்  தானமாகக்  கொடுப்பது  ' பிராமம்.'
வேள்வித்  தீ  வளர்க்கும்  வேதம்  உணர்ந்தானுக்குப்  பெண்ணைக்  கொடுப்பது  தெய்வமணம்.
வளர்த்ததற்குப்  பரிசு ( பரிசம் )  பெற்றுக்  கொண்டுப்  பெண்ணைக்  கொடுப்பது  ஆருசம்.
மணமாகாதவனை  அழைத்து  நல்லறம்  புரிந்து  நெடுநாள்  வாழ்வீராக  என  வாழ்த்தி  பெண்ணைக்  கொடுப்பது  பிரசாபத்யம்.
பெற்றவன்  கேட்கும்  பொருளைக்  கொடுத்துப்  பெண்ணை  கொள்வது  ஆசுரம்
ஆணும்  பெண்ணும்  தாமே  மணந்து  கொள்வது  காந்தருவம்.
பெண்ணைத்  தூக்கிச்  சென்று  மணப்பது  ராட்சசம்.
மது  மயக்கத்தில்  அல்லது  தூக்கத்தில்  அல்லது  பைத்தியமாய்  உள்ள  பெண்னை  மணப்பது  பைசாசம்.
--- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.

No comments: