Tuesday, March 17, 2015

தர்மமும் நீதியும்

 குருகுலவாசம்  முடிந்து  சீடர்கள்  கிளம்பும்போது  ' தர்மத்தைக்  காத்து  நீதி  வழி  நடந்திடுங்கள் '  என  குரு  ஆசியளித்தார்.  ' தர்மம்  வேறு;  நீதி  வேறா?'  என  சந்தேகம்  கொண்ட  சீடர்கள்,  குருவிடமே  விளக்கம்  கேட்டனர்.
     புன்னகைத்த  குரு,  ' நீதி  என்பது  இடத்திற்கும்,  சூழ்நிலைக்கும்  ஏற்ப  மாறும்.  உதாரணமாக  முன்  விரோதத்தால்  சண்டையிட்டு  ஒருவனைக்  கொல்வது  கொலை.  ஆனால்,  எதிரி  நாட்டின்  வீரர்களோடு  சண்டையிட்டுக்  கொல்வது  கொலையல்ல;  வீரம்!  இப்படி  நீதி  மாறக்கூடியது.  எனவே  அதைக்  காத்திட  முடியாது.  ஆனால்  தர்மம்  மாறாதது.  அதனைக்  காப்பாற்றுவது  அவசியம் !'  என  தெளிவுபடுத்தினார்.
     உணர்ந்த  சீடர்கள்  குருவை  வணங்கி  விடைபெற்றனர்.
-- ஜி.கே.சுந்தரமூர்த்தி,  கோபிசெட்டிபாளையம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31.  2012. 

No comments: