Wednesday, February 4, 2015

நிதி அமைச்சர் !

 " ' ஒரு  ரூபாய்  அரிசி  விலை  உயர்ந்தால்  மக்கள்  கூச்சல்  போடுகிறார்களே '  என்ற  ப. சிதம்பரத்துக்கு  நாட்டின்  நிதி  அமைச்சர்  பதவி  பரிசளிக்கப்பட்டுள்ளது  சரியா?"
       " உங்களை  ஆள்கிற  முதலமைச்சராகவோ  அல்லது  பிரதம  மந்திரியாகவோ  வராமல்போனாரே !
         ஒரு  சிறிய  கதை.  ஒருவர்  ஆசையோடு  வளர்த்த  மான்  காணாமல்  போனதால்  ரொம்பக்  கலங்கிப்  போனார்.  அவர்  கலக்கத்தைக்  கண்டு  மனம்  இரங்கி  இறைவன்  அவர்  முன்  தோன்றி, வேண்டிய  வரத்தைக்  கேட்கச்  சொன்னார்.
          அவர்,  ' என்  மான்  காணாமல்போக  யார்  காரணமோ,  அவர்  என்  கண்  முன்  வர  வேண்டும்.  என்  கையால்  அவருக்கு  நானே  தண்டனை  தர  வேண்டும்  என்றதும்  இறைவன்  அதிர்ந்துபோனார்.  பின்பு  தயங்கி,  ' அது  வேண்டாம்  பக்தனே...'  என்று  இழுத்தார்.  பக்தன்  கோபமுற்று,  ' இறைவா... ஒரு  பக்தனின்  வேண்டுகோளை  நிறைவேற்றாமல்  போவதற்குப்  பெயர்  வரமா? "  என்று  கேட்டார்.
         ' பக்தா...நன்றாக  யோசித்துத்தான்  கேட்கிறாயா...? '  என்ற  இறைவனைப்  பார்த்து,  ' ஆமாம்... நன்றாக  யோசித்த  பின்பே  கேட்கிறேன்.  முடியுமா..முடியாதா? '  என  பிடிவாதமாக  கேட்க,  இறைவன்  சலித்துப்போய்,  ' சரி...வேறு  வழி  இல்லை.  உன்  மானைக்  கொண்டுபோன  உயிரினம்  உன்  முன்  நிற்கக்  கடவது '  என்று  கூறி  மறைந்தார்.
          பக்தன்  முன்  தோன்றியது... ஒரு  சிங்கம்.
          பக்தன்  அலறினான்,  அலறி  என்ன  செய்ய?"
-- உ.அனந்த  கோபால்,  கரூர்.  நானே  கேள்வி...நானே  பதில்!
-- ஆனந்த விகடன்.  22 - 8 - 2012.   

No comments: