Friday, February 27, 2015

தெரியுமா? - தெரியுமே!

*  உலகப்  புகழ்  பெற்ற  ஈஃபிள்  டவர்  1889- ம்  ஆண்டு  மார்ச்  மாதம்  11 -ம்  தேதி  மக்களின்  பார்வைக்காக  திறக்கப்பட்டது.
*  சிறந்த  கட்டடக்  கலை  பொறியாளரான  கஸ்டாவ்  ஈஃபிள்  என்பவரால்  கட்டப்பட்டதால்,  அவரின்  பெயராலேயே  ' ஈஃபிள்  டவர் '  என்று  பெயர்
   உண்டாயிற்று.
*  மக்களின்  பேராதரவைப்  பெற்ற,  ' கோலா '  1886 -ம்  ஆண்டு  மார்ச்  29 -ம்  தேதி  அறிமுகமானது.
*  1- 4-1912 -- இந்தியாவின்  தலைநகரமாக  புது  டில்லி  அறிவிக்கப்பட்டது.  இதற்கு  முன்னர்  கல்கத்தா  தலைநகராக  செயல்பட்டு  வந்தது.
*  6 - 4 - 1942  - ஜப்பான்  விமானப்படை  இரண்டாவது  உலக  மகா  யுத்தத்தின்  போது  இந்தியாவின்  மீது  வெடிகுண்டு  தாக்குதல்  நடத்தியது.
*  25 - 4 - 1982  - தூர்தர்ஷன்  முதல்முறையாக  வண்னத்தில்  தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பியது.
*  18 - 4 - 1991  -  இந்தியாவிலேயே  முழுவதும்  கல்வியறிவு  பெற்ற  மக்களைக்  கொண்ட  மாநிலமாக  கேரளா  அறிவிக்கப்பட்டது.
-- தினமணி  சிறுவர்மணி .  31 - 3 - 2012.                                        
--- இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

No comments: