Wednesday, February 25, 2015

ஆசிரியன்.

   வேத  மந்திரம்  கற்பிப்பவன்  ஆச்சாரியன்.
      பொருள்  பெற்றுக்  கொண்டு  கல்வி  கற்பிப்போன்  உபாத்யாயன்.
      பிறவியையும்  வாழும்  வழியையும்  பயிற்றுவோன்  குரு.
      விரும்பி  வேண்டிக்  கொள்ள  தீ  வளர்த்தலும்  வேள்விகளும்    கற்பிக்கிறவன்  ' ரித்விக்.
      வேத  மொழிகளை,  ஒலி  பிசகாது  உச்சரித்து,  கேட்போர்  செவிகளுக்கு  நிறைவு  தருகின்றவன்  தாய்  தந்தைக்குச்  சமம்.
      உபாத்தியாயனைப்  பார்க்கிலும்,  ஆச்சாரியன்  பத்து  மடங்கு  உயர்ந்தவன்.  ஆச்சார்யனை  விட  அறிவு  நூல்  கற்க  வழி  காட்டிய  குரு  நூறு  மடங்கு  உயர்ந்தவன்.  பெற்ற  தாயோ  குருவைவிட  ஆயிரம்  மடங்கு  உயர்ந்தவள்.  பெற்ற  தாயைவிட  நன்னடை  தந்த  குருவே  உயர்ந்தவர்.
      தாயும்  தந்தையும்  பெற்றெடுக்கும்  உடல்  ஒரு  விலங்கு  போன்றதே.'
- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு. 

No comments: