Monday, February 23, 2015

சாம்பிராணி தைலம் !.

ஜலதோஷத்துக்கு  சாம்பிராணி  தைலம் !
      தலைவலி,  ஜலதோஷம்  போன்றவற்றை  போக்கும்  சாம்பிராணி  தைலத்தை  செய்வது  எப்படி?
      களிம்பு  ஏறாத  பெரிய  பாத்திரத்தை  எடுத்து,  அதில்  300  கிராம்  பளிங்கு  சாம்பிராணியை  போட்டு  மேலே  காற்று  புகமுடியாத  அளவில்  ஒரு  தாம்பாள  தட்டை  வைத்து  மூடி,  தீ  எரிக்க  வேண்டும்.  மூடியிருக்கும்  தாம்பாளத்தில்  தண்ணீர்  விட்டு  வைக்க  வேண்டும்.  ஒரு  மணி  நேரம்  கழித்தபிறகு,  மூடிய  எடுத்து  பிடித்தால்  மூடியில்  அடியில்  சாம்பிராணி  தைலம்  ஒட்டி  இருக்கும்.  இதை  வழித்து  ஒரு  கண்ணாடி  கோப்பையில்  வைத்து  கொண்டு  கஸ்தூரி  தைலத்தை  அதில்  விட்டு  கலக்கி  மூடி  போட்ட  சீசாவில்  அடைத்து  கொள்ள  வேண்டும்.
-- -தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012.