Thursday, February 19, 2015

தெரிஞ்சுக்கோங்க...

*  திருக்குறளை  முதன்முதலாக  ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தவர்  ஜி.யு.போப்  ஆவார்.
*  தேசிய  தாவரவியல்  பூங்கா  லக்னோவில்  துவங்கப்பட்டது.
*  ஆங்கிலம்  1835 ம்  ஆண்டு  இந்தியாவின்  கல்வி  மொழியானது.
*  சூயஸ்  கால்வாய்  செங்கடலையும்,  மத்தியதரைகடலையும்  இணைக்கிறது.
*  மிகக்  குறைந்த  வெப்பநிலை  குறித்தும்,  அதை  உருவாக்குவது  பற்றியும்  படிப்பது  ' கிரயோஜெனிக்ஸ் ' ஆகும்.
*  டில்லி - லாகூர்  இடையே  பஸ்  போக்குவரத்து  முதன்முதலாக  1999ம்  ஆண்டு  துவங்கப்பட்டது.
*  இந்தியாவில்  1957ம்  ஆண்டு  " அனா  நாணய  முறை  மாற்றப்பட்டு  புதிய " பைசா "  நாணய  முறை  அறிமுகப்படுத்தப்பட்டது.
*" மெட்ராஸ் "  என்னும்  பெயர்  " சென்னை "  என்று  1996ம்  ஆண்டு  அதிகாரப்பூர்வமாக  மாற்றம்  செய்யப்பட்டது.
*  பூமி  சூரியனை  சுற்றிவரும்  அதே  திசையில்  வலம்  வரும்  கிரகம்  " வீனஸ் "  ஆகும்.
-- தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012. 

No comments: