Thursday, February 12, 2015

ஒடிசா உல்லாசம் !

ஒடிசா  கடற்கரையில்  ஒரு  உல்லாசம் !
     ஒடிசா  மாநிலத்தில்  உள்ள  35  கி.மீ,  நீளமுள்ள  கடற்கரைக்கு  ' கரிமாத்தா '  என்று  பெயர்.  ஆண்டுதோறும்  டிசம்பர்  முதல்  மார்ச்  மாதம்  வரையிலான  காலத்தில்  இந்தக்  கடற்கரையில்  ' அரிபாடா '  என்னும்  அரிய  கண்கவர்  நிகழ்ச்சி  சிறப்பாக  நடைபெறுகிறது
     அரிபாடா  என்பது  வேறொன்றுமில்லை.  ஆலிவ்  ரிட்லி  எனப்படும்  உலகிலேயே  மிகச்  சிறிய  வகை  ஆமைகள்  பெருந்திரளாய்க்  கூடி  முட்டையிடும்  காட்சிதான்.
      உலகக்  கடற்பரப்பில்  பல  திசைகளில்  இருந்து  வந்து  சேரும்  இந்த  ஆமைகள்,  கரிமாத்தா  கடற்கரையில்  ஜோடி  ஜோடியாய்  காதல்  புரியும்  போது,  கடற்கரை  நீர்ப்பகுதி  முழுவதும்  கருந்திட்டுகள்  போல்  காட்சியளிக்கும்.
      கடல்நீரிலேயே  முழுமையாய்  காலம்  கழிக்கும்  இந்த  ஆமைகள்  முட்டையிடுவதற்கு  மட்டுமே  தடம்மாறி  தரைக்கு  வருகின்றன.  இப்படி  வரும்  ஆமைகள்  ஆபத்து  கருதி,  இரண்டு  மணி  நேரத்திற்குள்  தமக்கு  பிடித்தமான  இடத்தைக்  கடற்கரையில்  தேர்வு  செய்து  தன்  பின்னங்கால்களால்  மண்ணைத்  தோண்டி  ஒரு  மணர்குழிவை  ஏற்படுத்துகின்றன.  பிறகு  இக்குழியின்  முன்புறத்தில்  அமர்ந்து  எக்கச்சக்கமான  முட்டைகளை  இட்டு,  தம் பின்ங்கால்களால்  மணலை  இறைத்து  குழியை  மூடிவிட்டு  கடலுக்குத்  திரும்பி  விடுகின்றன.  இப்படி  ஒவ்வொரு  சீசனிலும்  பெண்  ஆமைகள்  ஒரு  மில்லியனுக்கு  மேல்  இங்கே  ஒன்று  கூடி  50  மில்லியன்  முட்டைகளுக்குமேல்  இடுகின்றன  என்பது  ஒரு  ஆச்சரியம்.
     இந்த  நிகழ்வு  ஒடிசாவில்  மட்டுமே,  பல  நூற்றாண்டுகளாக  நடந்து  வருகிறது  என்பது  ஒரு  ஆச்சரியம்.
-- டாக்டர்  ஆர்.கோவிந்தராஜ்,  சென்னிமலை.
-- தினமலர்  இணைப்பு .  21  அக்டோபர், 2012. 

No comments: