Wednesday, February 11, 2015

தித்திப்பா? திக்திக்கா?

  பெரிய  நிறுவனங்களில்  மட்டுமே  தயாரிக்கப்பட்டு  வந்த  சாக்லேட்டுகள்,  சமீபகாலமாக  வீடுகளிலும் ( ஹோம்  மேட் )  உற்பத்தி  செய்யப்படுவது  ஆச்சரியம்.  வணிகப்  போட்டி  வேறு  நெருக்குவதால்,  விற்பனையைப்  பெருக்க  நிறுவனங்கள்  புதிய  உத்தியை  பயன்படுத்த  வேண்டிய  கட்டாயம்.  அதனால்  ' சாக்லேட்டு'களில்  சுவையை  கூட்டுவதற்கு  'கஃபீன்',  ' கொகெய்ன்'  உள்ளிட்ட  உயிருக்கு  உலை  வைக்கும்  'அல்கலாய்டு'  வகை  ரசாயனப்  பொருட்களை  அளவுக்கு  அதிகமாகச்  சேர்ப்பதாகச்  சொல்கிறார்கள்.  கலர்  கலராய்,  வாங்கத்  தூண்டும்  வகையில்  நிறமிகள்  சேர்த்து  தயாரிக்கப்பட்ட  சீன  சாக்லேட்டுகளில்  இந்த  ஆபத்து  அதிகமாக  இருப்பது  கூடுதல்  அதிர்ச்சி.  இந்த  ' பகீர் '  தகவலால்  பெற்றோர்களிடையே  ஒருவித  பீதி,  பயம்  பரவியுள்ளது.
     பால்,  சர்க்கரை,  கொக்கோ,  காபி  பவுடர்  உள்ளிட்டவை  தான்  சாக்லேட்  தயாரிக்க  அடிப்படை.  அதுவும்  கறுப்பு  ( டார்க் )  சாக்லேட்டுக்கு  90%  காபி  பவுடர்  மட்டுமே  மூலதனம்.  இந்தப்  பொருட்களை  அனுமதிக்கப்பட்ட  அளவு  மட்டும்  பயன்படுத்தினால்  ஆபத்தில்லை.  ஆனால்  சுவையைக்  கூட்டுவதற்காக  அளவுக்கு  அதிகமாக  பயன்படுத்துவதுதான்  பிரச்னைக்கு  பிள்ளையார்  சுழி.
    இதில்  மற்றொரு  ஆபத்து  என்ன  தெரியுமா?  சாக்லேட்  தயாரிக்கும்  போது,  காற்றின்  ஈரப்  பதத்திலிருக்கும்  காரீயம் ( ! )  ( லெட் )  மூலப்  பொருளோடு  கலந்துவிடும்  என்பதுதான்.  மிக  நுண்ணிய  அளவு  காரீயம்  இருந்தாலே  ஆபத்து  பல  மடங்கு.  இது  மனிதத்  தவறு  இல்லைதான்.  ஆனால்,  இயற்கையாகவே  சாக்லேட்டில்  காரீயம்  கலப்பதற்கான  வழிமுறைகள்  ஏதும்  இன்றுவரை  கிடையாது  என்பது  கூடுதல்  அதிர்ச்சி.
--- எஸ்.அன்வர்.  குமுதம்.  24 - 10 - 2012 .  

No comments: