Monday, January 5, 2015

தெய்வீக வீணை.

 வீணை  என்று  சொன்னதுமே  எல்லோருக்கும்   சரஸ்வதியின்  நினைவுதான்  வரும்.  ஆனால்,  32  வகையான  வீணைகளை  31  தெய்வங்கள்  இசைப்பதாக  புராணங்கள்  சொல்கின்றன.  இதோ     தெய்வங்களும்  அவர்களுக்குரிய  வீணையின்  பெயர்களும்:
     1. பிரம்மதேவனின்  வீணை  -  அண்டம்.  2. விஷ்ணு  -  பிண்டகம்.  3. ருத்திரர்  -  சராசுரம்.  4. கௌரி  -  ருத்ரிகை.  5. காளி  -  காந்தாரி.  6. லட்சுமி  -  சாரங்கி.  7. சரஸ்வதி  -  கச்சபி  எனும்  களாவதி.  8. இந்திரன்  -  சித்திரம்.  9. குபேரன்  -  அதிசித்திரம்.  10. வருணன்  -  கின்னரி.  11. வாயு  -  திக்குச்சிகை.
யாழ்.  12. அக்கினி  -  கோழாவளி.  13. நமன்  -  அஸ்த  கூர்மம்.  14. நிருதி  -  வராளி  யாழ்.  15. ஆதிசேடன்  -  விபஞ்சகம்.  16. சந்திரன்  -  சரவீணை.  17. சூரியன்  -  நாவீதம்.  18. வியாழன்  -  வல்லகி  யாழ்.  19. சுக்கிரன்  -  வாதினி.  20. நாரதர்  -  மகதி  யாழ்  ( பிருகதி ).  21. தும்புரு  களாவதி ( மகதி ).  22. விசுவாவசு  -  பிரகரதி.  23. புதன்  -  வித்யாவதி.  24. ரம்பை  -  ஏக  வீணை.  25. திலோத்தமை  -  நாராயணி.  26. மேனகை  -  வணி.  27. ஊர்வசி  -  லகுவாக்ஷி.  28. ஜயந்தன்  -  சதுகம்.  29. ஆஹா,  ஊஹூ  தேவர்கள்  -  நிர்மதி.  30. சித்திரசேனன்  -  தர்மவதி ( கச்சளா ).  31. அனுமன்  -  அனுமதம்.
32 வது  வகை  வீணையை  வாசிப்பவன்,  ராவணன்  அவனது  வீணையின்  பெயர்  -  ராவணாசுரம்.
-- எஸ்.ஜெயந்தி,  சென்னை - 92.
-- குமுதம்  பக்தி ஸ்பெஷல்  ஜூன்  1 - 15, 2012.
-- இதழ் உதவி:  P. சம்பத் ஐயர்,  திருநள்ளாறு.  

No comments: