Saturday, January 3, 2015

கிரகணம்.

   இது  ஒரு  வானவியல்  நிகழ்வு.  வானில்  பல  பொருட்கள்  வலம்  வந்து  கொண்டிருக்கின்றன.  அவை  நகர்ந்து  செல்லும்போது  சில  சமயம்  ஒன்றின்  பாதையில்  மற்றொன்று  குறுக்கிட  நேரிடும்.  அப்போது  அந்த  வான்பொருள்  நம்  பார்வையிலிருந்து  மறைக்கப்படும்.
     இந்நிகழ்வு  சூரிய  குடும்பத்துக்குள்  நிகழும்போது  மறைக்கப்படும்  பொருளின்  பெயரை  வைத்து,  அதன்  கிரகணம்  என்று  சொல்லப்படுகிறது.
     சந்திரன்  பூமியைச்  சுற்றி  வரும்போது  29 1/2  நாட்களுக்கு  ஒருமுறை  பூமிக்கும்  சூரியனுக்கும்  இடையேயும்,  சூரியனுக்கு  எதிர்திசையிலும்  வருகிறது.  அதனால்  பூமியில்  இருப்போருக்கு  இருட்டாக  அமாவாசையாகவும்  சூரிய  ஒளிவெளிச்சம்  பெற்று  பிரகாசமாக  பவுர்ணமியாகவும்  சந்திரன்  தோற்றமளிக்கிறது.  இதற்கான  காரணம்  சூரியன்,  பூமி,  சந்திரன்  ஆகிய  மூன்றும்  குறித்த  தினங்களில்  ஒரே  நேர்  கோட்டில்  வருவதே.
     பவுர்ணமி  தினத்தில்  பிரகாசமாக  தோற்றமளிக்க  வேண்டிய  சந்திரன்  சில  சமயங்களில்  பூமியின்  நிழலால்  மறைக்கப்பட்டும்,  அமாவாசை  தினத்தில்  சூரியன்  சந்திரனின்  நிழலால்  மறைக்கப்பட்டும்  விடுகின்றது.  இவ்  நிகழ்வையே  சந்திர,  சூரிய  கிரகணம்  என்று  அழைக்கிறோம்.
-- தினமலர் .  இணைப்பு.  செப்டம்பர்  28.  2012.  

No comments: