Tuesday, January 13, 2015

டிப்ஸ்...டிப்ஸ் !

*  நாம்  நினைத்தது  நிறைவேற  வேண்டும்  என்றால்,  அதற்கு  நாம்  தீவிரமாக  ஆசைப்பட  வேண்டும்.  அது  நிச்சயம்  நடந்தே  தீரும்  என்று  நம்ப
    வேண்டும்.    -- குடியரசுத்  தலைவர்.  ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
* கோயில்களில்  இருக்கும்  கொடிமரத்தின்  தாத்பரியமே,  பஞ்ச  பூதங்களில்  ஒன்றான  ஆகாயத்தில்  அமைந்துள்ள  பிரம்மத்தின்  கதிர்களை  கோயிலின்
  கும்பத்திற்கு  செலுத்தி,  அங்கிருந்து  மூலவருக்கு  அதனை  அளிப்பதுதான்.  கொடி  மரத்திற்கு  முன்னால்  மட்டும்தான்  விழுந்து  கும்பிடவேண்டும்.  மற்ற
  இடங்களில்  செய்வது  தவறாகும்.
* பிரம்ம  முகூர்த்த  நேரத்தில் ( அதிகாலை  4.30  மணி  முதல்  5.30  மணி  வரை )  வாசல்  தெளித்து  கோலம்  போடும்  வீட்டின்  உள்ளே  ஸ்ரீமகாலஷ்மி
  ஆசையோடு  வருனாள்.  கோலத்தின்  நடுவில்  அகல்  விளக்கை  கிழக்கு  முகமாக  ஏற்றி  வைத்தால்,  அந்த  வீட்டில்  மங்கலம்  பெருகி,  செல்வம்
  நிறையும்.
* கோலத்தைக்  குனிந்து  நின்றுதான்  போட  வேண்டும்.  அமர்ந்தபடி  பொடக்கூடாது.  கோலத்தில்  தவறு  வராமல்  போடுவது  மிகவும்  நல்லது.
   ஒரு  வேளை  புள்ளிகளோ  இழைகளோ  தவறாகி  விடுமானால்,  அவற்றை  ஈரத்  துணியால்  ஒற்றி  எடுத்துவிட்டு  மறுபடி  போடவேண்டும்.  கோலத்தை
   ஒருபோதும்  கையாலோ  அல்லது  காலாலோ  அழிக்கக்கூடாது.
* பெரும்பாலான  கோயில்களில்  பலிபீடம்  அமைந்திருக்கும்.  பலிபீடம்  என்பது  பாசத்தைக்குறிக்கும்.  பலிபீடத்தை  ஸ்ரீபலிநாதர்  என்றழைப்பர்.
   ஆலயத்தில்  எட்டு  மூலைகளில்  பலி  பீடங்கள்  அமைந்திருக்கும்.  இதனை ' அஷ்ட  திக்பாலகர்கள் '  என்று  கூறுவர்.  இதற்கெல்லாம்  முதன்மையானது
   சிவனுக்கு  எதிரில்  நந்தியின்  பின்புறமாக  அமைக்கப்பட்டிருக்கும்!
--- குமுதம்  சிநேகிதி ,  ஆகஸ்ட்  15,  2006.  

No comments: