Tuesday, December 9, 2014

மாயன் காலண்டர்.

  எழுத்து,  கலை,  கணிதம்,  வானவியல்  ஆகியவற்றில்  சிறந்து  விளங்கிய  மாயன்கள்  கி.மு.  2000  முதல்  கி.மு.  900  வரை  வாழ்ந்தனர்.  சூரிய  காலண்டரை  கண்டுபிடித்த  இவர்கள்,  சாக்லட்  தயாரிப்பதிலும்  வல்லவர்களாக  இருந்தனர்.  உலகில்  முதன்  முதலில்  கோகோ  பவுடரை  கண்டுபிடித்து  சுவைத்தவர்கள்  இவர்கள்தான்.  கோகோ  பவுடர்  புத்துணர்ச்சி  தரும்  பானம்  மற்றும்  எல்லா  நோய்களையும்  குணப்படுத்தும்  என்பதால்  சாக்லட்  பிரியர்களாக  இருந்தனர்.
    கி.மு.  1050 ம்  ஆண்டு  சிசேன்  இட்ஷா  என்ற  இடத்தில்  பிரமிடுபோல்  இவர்கள்  ஒரு  கோயிலை  கட்டினர். குல்குல்கான்  என்பது  அந்த  கோயிலின்  பெயர்.  இந்த  கோயிலைத்தான்  அவர்கள்  காலண்டராக  பயன்படுத்தினார்கள்.  பிரமிடு  போல்  அமைந்த  இந்த  கோயிலின்  4  பக்கங்களிலும்  ஒரு  ஆண்டை  நான்காக  வகுத்து  தலா  91  படிகளால்  அமைக்கப்பட்ட  மாடிப்படி  இருந்தது.  பிரமிடின்  மேல்தளம்  கணக்கில்  எடுத்துக்கொள்ளப்பட்டு,  165  நாட்கள்  வரும்  வகையில்  இதை  வடிவமைத்தனர்.
    மாயன்கள்  காலண்டர்  12.12.2012  அன்று  முடிவதாக  அமைக்கப்பட்டிருந்தது.  ஒரு  சுழற்சி  5  ஆயிரத்து  125  ஆண்டுகள்  என்று  கணக்கிட்டு  வானவிவியல்  எண்  கணித  முறைப்படி  இது  அமைக்கப்பட்டதால்  21ம்  தேதி  உலகம்  அழியும்  என்று  எல்லாரும்  நினத்தனர்.  ஆனால்  அது  புஸ்வானமாகிப்போனது.
-- தினமலர் .30.12. 2012. 

No comments: