Wednesday, December 3, 2014

டிப்ஸ்...டிப்ஸ்...

*  பாகற்காயை  அப்படியே  வைத்தால்  ஒன்றிரண்டு  நாட்களில்  பழுத்து  விடும்.  இதைத்  தவிர்க்க,  காய்களை  மேற்புறமும்  அடிப்புறமும்  வெட்டிவிட்டு,
   இரண்டாக  பிளந்து  வைத்து விடவும்.  பல  நாட்கள்  வரை  பழுக்காமல்  இருக்கும்.
*  காய்கறிகளை  பாலிதீன்  கவரில்  போட்டு  ஃபிரிட்ஜில்  வைக்கப்  போகிறீர்களா?  ஒரு  நிமிடம்.. கவர்களில்  கோணி  ஊசி  அல்லது  கூரான  ஆணி
   கொண்டு  குத்தி  துளைகள்  போட்ட  பின்,  காய்களை  அதில்  வைத்தால்,  காய்கள்  பல  நாட்கள்  அழுகாமல்  இருக்கும்.
*  மிக்ஸி ( அ ) கிரைண்டரில்  தோசை  மாவு,  சட்னி,  துவையல்  போன்றவற்றை  அரைத்து  வழித்து எடுத்ததும்,  மீண்டும்  ஜாரில்  சிறிது  நீர்விட்டு
   ஜாரை  ஓட்டவும்.  அதனுள்ளே  கெட்டியாக  ஒட்டிக்  கொண்டிருக்கும்  மாவு  தண்ணீரோடு  கரைந்து  வந்து  விடுவதால்,  ஜாரை  சுத்தம்  செய்வது
   மிகவும்  சுலபம்.
*  தேங்காய்  பர்ஃபி  செய்யும்போது  துருவிய  தேங்காயை  அப்படியே  சர்க்கரை  பாகில்  சேர்க்காமல்,  முதலில்  தேங்காய்  துருவலுடன்  அரை  டம்ளர்
   பால்,  5  முந்திரிப்  பருப்பு  சேர்த்து  மிக்ஸியில்  அரைத்து  பிறகு  சர்க்கரை  பாகில்  சேர்த்தால  தேங்காய்  திப்பிதிப்பியாக  இல்லாமல்,  பர்ஃபி
   மிருதுவாக  இருக்கும்.
*  நெய்  காய்ச்சிய  பாத்திரத்தில்  ஒரு  டம்ளர்  நீர்  வீட்டு  கொதிக்க  வைத்து  அடுப்பில்  வைத்திருக்கும்  சாம்பார்  அல்லது  ரசத்தில்  அதை  வடிகட்டி
   கொட்டி  விடுங்கள்.  நெய்  மணம்  கமழும்  சாம்பார்  ரெடி.
* தேன்குழல்,  முறுக்கு  மிருதுவாக  வர  வேண்டுமா?  மாவில்  வெண்ணெய்,  டால்டா,  நெய்  போன்றவற்றை  நேரடியாக  சேர்க்காமல்,  முதலில்  அரை
   டம்ளர்  வெந்நீரில்  இவற்றை  தேவையான  அளவு  போட்டு  உருக்குங்கள்.  அந்தத்  தண்ணீர்  சூடாக  இருக்கும்போதே  மாவில்  கலந்து  பிசைந்தால்,
   வெண்ணெய்  மாவு  முழுவதும்  சீராக  பரவி,  கைகளில்  ஒட்டாமல்  இருக்கும்.  பலகாரங்களும்  மிருதுவாக  இருக்கும்.
-- மகாலட்சுமி,  காரைக்கால் - 2.
-- அவள் விகடன்.  24 - 10 - 2008.  

No comments: