Monday, December 29, 2014

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்

 இந்தியா முழுக்கப் பணியாற்றும் 6,217 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளில் 1,057 பேர் தங்கள் சொத்துக் கணக்கை வெளியிட யோசிக்கிறார்களாம்.  அரசு இயந்திரத்தின் அச்சாணிகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.  2010-ல் 198 அதிகாரிகளும் 2011-ல் 107 அதிகாரிகளும் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.  அந்த எண்ணிக்கைதான் 2012-ல் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.  இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 20 பேர்.  --  மடியில் கனம்?
சீனாவில் வீடு விற்பனை.
     வீடு விற்பனையின்போது விதிக்கப்படும் வரியைத் தவிர்க்க கணவன் - மனைவி தங்களுக்குள் விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்து கொள்கிறார்களாம் சீனாவில்.  அங்கு வீடு விற்பதற்கான வரிகளை வசூலிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன.  தனி நபராக இருந்தால் வரி விலக்கு உண்டு.  இதனால், குழந்தைகள் பெற்ற வயதான தம்பதிகள்கூட வரிவிலக்குச் சலுகையை அனுபவிக்க, விவாகரத்து செய்து வீட்டை விற்று பின் மீண்டும் இணைந்துகொள்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரே நாளில் 53 ஜோடிகளுக்கு விவாகரத்து வழங்கி சாதனை படைத்துள்ளது ஒரு திருமண அலுவலகம்.  -- விவாகரத்து பண்றதுக்கு வரி போடுங்க ஆபீஸ்ர்ஸ்!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன்.  27 -03- 2013. 

No comments: