Friday, December 26, 2014

கைரேகை.

  தாயின்  கருப்பையில்  மூன்று  மாத  சிசுவாக  இருக்கும்போதே  கைரேகைகள்  உருவாகத்  தொடங்கிவிடும்.  ஆயுள்  முழுக்க  கைரேகை  மாறாது.
     விரல்  தோல்கள்  ஏதாவது  காரணத்தால்  உரிந்து  பிரிந்தாலும்,  புதிதாகத்  தோன்றும்  தோலிலும்  பழைய  கைரேகைதான்  இருக்கும்.
     ஒவ்வொருவரின்  கைரேகையும்  தனிப்பட்ட  வகையில்  அமைந்திருக்கும்.  அதாவது,  எந்த  இரு  மனிதர்களின்  கைரேகைகளும்  ஒன்று  போல்  இருக்காது.  இரட்டைக்  குழந்தைகளுக்குக்கூட  ஒரே  கைரேகை  இருக்காது.  இந்த  ' தனித்துவ '  அம்சம்தான்,  கைரேகை  அடிப்படையில்  குற்றவாளிகளை  அடையாளம்  காண  உதவுகிறது.
---  -தினமலர் . சிறுவர்மலர் .  3.6.2011.  

No comments: