Tuesday, December 23, 2014

என்ன வேண்டும்?

படுத்தவுடன்  உறக்கமது  வருதல்  வேண்டும்
பசித்தவுடன் உண்ணுகிற  நிலைமை  வேண்டும்
எடுத்தவுடன்  படிக்கின்ற  நூல்கள்  வேண்டும்
இசைத்தமிழே  என்  செவியை  அடைதல்  வேண்டும்
உடுத்தவுடன்  துணிமணிகள்  இருத்தல்  வேண்டும்
உணவாக  மரக்கறியே  இருக்க  வேண்டும்
கொடுத்தவுடன்  வாங்காத  மாந்தர்  வேண்டும்
குன்றாத  நட்புறவு  இருத்தல்  வேண்டும்.
-- ' முகம் '  இதழில்  - தமிழப்பன்.
கெட்ட  ஜோக் !
பஸ்ஸில்  கேட்ட  ஜோக்  ஒன்று  சொல்லமுடியுமா?
     கேட்ட  ஜோக்  என்றாலும்  கெட்ட  ஜோக்  இது.  பஸ்ஸில்  ஒரு  வம்பு  பிடித்த  கிழவர்  இடத்தை  அடைத்துக்  கொண்டு  நிற்கிறார்.  தெனாவெட்டாய்  நான்,  "  யோவ்  பெரிசு,  நகருய்யா"  என்றேன்.  பெரியவர்  என்னைத்  திரும்பிப்  பார்த்தார்.  " எனக்குப்  பெரிசுன்னு  உனக்கு  எப்படிய்யா  தெரியும்?  எங்க  பார்த்தே? "  என்றார்.  தற்கொலைக்காக  நான்  ஜன்னல்  வழியாகக்  கீழே  குதித்தேன்.
-- அரசு பதில்கள் .  குமுதம் . 10.1.2007.  

No comments: