Monday, December 22, 2014

அகத்தியர்.

  பதினெண்சித்தர்களில்  ஒருவரான  அகத்தியர்  காய்கறி,  கீரை,  கனிகள்  ஆகியவற்றின்  பண்பு,  பயன்பாடுகளைப்பற்றி  நிறைய  அறிந்தவர்.  அவரிடம்  ஒரு  சீடர்,  " குருநாதரே!  மானிடரின்  இல்லற  இன்பம்  செழிப்பாக  இருக்க  எளிய  கீரை  ஏதும்  சொல்லுங்களேன்?"  என்று  கேட்டார்.
     குறுந்தாடியைத்  தடவியவாறு  அகத்தியர்  ஓர்  உவமை  மூலம்  ஐந்து  விதமான  கீரைகளைப்பற்றிக்  கூறுகின்றார்.  இவைதான்  அந்தக்கால  ' வயாக்ரா'கீரைகள் !
     " நறுந்தாளி  நன்  முருங்கைத்
       தழை
       தூதுவளை  நற்பசலை
       வாளில்  அறுகீரை
       நெய்வார்த்து  உண்ணில்
       யாளியென  விஞ்சுவார்
       போகத்தில்"
என்று  சீடருக்குப்  புன்னகைத்தவாறு  பதில்  கூறினாராம்  அகத்தியர்.
      யானையைவிடப்  பெரிதான  ' யாளி '  தற்போது  இல்லை.  கோயில்  சிலைகளில்  மட்டுமே  ' யாளி '  எனும்  மிருகத்தைக்  காணலாம்.  காதல்  களியாட்டத்தில்  நாம்  அந்த  யாளீயையே  மிஞ்ச  முடியுமாம் !  எப்படி?  நறுந்தாளி,  நன்முருங்கை,  தூதுவளை,  நற்பசலை,  அரைக்கீரை - இந்த  ஐந்து  கீரைகளையும்  தினம்  ஒன்றாக  பருப்பு,  மிளகு,  சீரகம்,  பூண்டு,  சிறுவெங்காயம்  சேர்த்துப்  பொரியல்  செய்து  பகல்  உணவில்  மட்டும்  இரண்டு  பிடி  சாதத்தில்  ஒரு  கப்  அளவு  கீரையும் - ஒரு  ஸ்பூன்  நெய்யும்  சேர்த்துச்  சுவையுடன்  சாப்பிட்டால்  போதும் !  இதுதாங்க  காதல்  கெமிஸ்ட்டிக்கான  பால  பாடம்.
-- மூலிகைமணி  டாக்டர்  கே.வெங்கடேசன்.
-- குமுதம்.  20 . 12. 2006 

No comments: