Tuesday, December 2, 2014

' இஞ்சி இடுப்பழகு '

  இஞ்சி  என்பது  நம்  உடல்  நலன்காக்கும்  நல்ல  உணவுப்  பொருள் ( மருந்துப்  பொருள் ).  இஞ்சிச்சாறு  காலையில்  பருகினால்  வயிற்றில்  உள்ள  தேவையில்லா  சதையை ( தொப்பையை )  குறைத்து  இடுப்பை  வலிவாகவும்,  வனப்பாகவும்  ஆக்கும்.
     இஞ்சிச்சாறு  வழக்கமாகப்  பருகிகின்றவர்களுக்கு  இடுப்பு  அளவோடு,  அழகாக  இருக்கும்.  அதனாலே  இஞ்சி  இடுப்பழகு  என்றனர்.
    " காலை  இஞ்சி
      கடும்பகல்  சுக்கு
      மாலைக்  கடுக்காய்
      மண்டலம்  தின்றால்
      கோலை  எறிந்து
      குலாவி  நடப்பர் "
-- என்பது  சித்தர்  பாடல்.
     காலையில்  இஞ்சிச்சாறும்,  பகலில்  சுக்குச்சாறும்,  மாலையில்  கடுக்காய்  சாறும்  பருகினால்,  உடல்  வலுப்பெறும்  என்பது  மேற்கண்ட  பாடலின்  பொருள்.  அந்த  அளவுக்கு  இஞ்சி  உடலுக்கு  உகந்தது.  இளமையும்,  இடுப்பழகும்  தரக்கூடியது.  ( இஞ்சி  சாப்பிடும்போது  அதன்மீதுள்ள  தோலை  நன்றாகச்  சீவி  அகற்றி  விடவேண்டும்.  காரணம்,  இஞ்சித்தோல்  நச்சுத்  தன்மை  உடையது.  கேடு  தரக்கூடியது ).
-- மஞ்சை  வசந்தன்,  பாக்யா.  அக்டோபர்  2 - 8;  2009.  

No comments: