Saturday, December 13, 2014

டிப்ஸ்...டிப்ஸ்...

*  வீட்டுக்கு  வரும்  விருந்தினர்  சாப்பிட்ட  பின்  ஹோட்டல்களில்  கொடுப்பதைப்  போல்  வருத்த  சோம்பை  நீங்கள்  தயாரித்துக்  கொடுக்கலாம்.  ஒரு
   கரண்டி  சோம்பு  வெறும்  வாணலியில்  ஒரு  நிமிடம்  வறுத்தால்  மொறுமொறு  என்றாகிவிடும்.  அதை  ஒரு  தட்டில்  கொட்டிவிட்டு,  அதே  வாணலியில்
   நாலு  ஸ்பூன்  சர்க்கரையை,  இரண்டு  ஸ்பூன்  தண்ணீர்  சேர்த்து  ஒரு  நிமிடம்  கிளரினால்...நன்கு  கரைந்துவிடும்.  இதை  சோம்பில்  கொட்டிக்  கிளறி
   ஆறவிட்டு,  ஒரு  டப்பாவில்  போட்டு  மூடி  வைத்துக்  கொள்ளுங்கள்.  தேவையானபோது  எடுத்துப்  பயன்படுத்துங்கள்.
* .பாயசத்தில்  முந்திரியை  வறுத்துப்  போடும்போது,  சிலசமயம்  கருகிவிடும்.  நேரமானால்  நமத்துவிடும்.  அதற்குப்  பதிலாக,  ஒரு  கரண்டி  பாயசத்தை
   எடுத்து,  அதில்  முந்திரியை  உடைத்துப்  போட்டு,  மிக்ஸியில்  அரைத்து,  பாயசத்தில்  சேர்த்துவிட்டால்... சுவை  கூடும் !
*  வெண்ணெய்  வாங்கி  வந்ததும்  அப்படியே  ஃப்ரிட்ஜுக்குள்  வைத்து  விடாமல்,  சிறு  துண்டுகளாக்கி  வைக்கவும்.  பிரெட்டுக்குத்  தடவ,  பட்டர்  தோசை
   சுட,  பட்சண  வகைகள்  தயாரிக்க  என  பல்வேறு  சமயங்களில்  தேவையான  துண்டுகளை  மட்டும்  எடுத்துக்  கொண்டால்,  மீதி  வெண்ணெய்
   அப்படியே  ஃப்ரிட்ஜில்  பல  நாட்கள்  வரை  கெட்டுப்  போகாமல்  இருக்கும்.
*  சப்பாத்திகளை  சுட்டதும்,  குறைந்தது  ஒன்றிரண்டு  மணி  நேரம்  சூடாகவும்,  மிருதுவாகவும்  வைத்திருக்க  எளிய  வழி... நாலு  சப்பாத்திகள்
   தயாரானதும்,  அலுமினியம்  ஃபாயில்  பேப்பரில் ( aluminium  foil )  சுற்றி  வைத்துவிடுங்கள்.  இப்படி  எல்லா  சப்பாத்திகளையும்  சுற்றி
   வைத்துவிட்டால்...தேவையானபோது  பிரித்தெடுத்து,  சுவை  குறையாமல்  பரிமாறலாம்.
*  ரசம்  தயாரிக்கும்போது  தக்காளியை  முதலிலேயே  சேர்ப்பதைவிட,  தக்காளியைத்  துண்டுகலாக்கி  நெய்யில்  வதக்கி  வைத்துக்  கொண்டு,  ரசம்
   தயாரித்து  முடித்ததும்,  சேர்த்துவிட்டால்... ரசம்  தெளிவாகவும்  சுவையாகவும்  இருக்கும்.
-- அவள் விகடன்.  15 - 01 - 2013.
-- இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

No comments: