Wednesday, December 10, 2014

பால் தாக்கரே....

  " மராட்டியம்  மராட்டியருக்கே... வேற்று  மொழியினருக்கு  இங்கே  இடம்  இல்லை " என்றார்  ஒருசமயம்.  இன்னொருசமயம்,  " தமிழர்களை  மிகவும்  நேசிக்கிறேன்.  ஈழத்  தமிழர்கள்,  இந்தியாவின்  குழந்தைகள்..." என்றார்.  பாபர்  மசூதி  இடிப்பை  முன்னின்று  நடத்திய  அரசியல்  கட்சிகள்  அடையாளம்  மறைத்துப்  பின்வாங்க,  " ஒருவேளை  சிவசேனா  இடித்து  இருந்தால்,  நான்  பெருமை  அடைகிறேன்..." என்றவர். " இஸ்லாமிய  பயங்கரவாதத்தை  ஒழிக்க  இந்துக்கள்  தற்கொலைப்  படையினராக  மாறவேண்டும் "  என்று  கர்ஜித்தவர்.  தனது  பேத்தி  நெகா,  ஒரு  முஸ்லீமை  மணந்தபோது  முன்னின்று  வாழ்த்தினார்.  "கடவுள்  இல்லாமல்  உலகம்  இயங்காது "  என்று  சொன்ன  தீவிர  சைவ  சித்தந்த  ஆத்திகர்.  தனது  மனைவி  மீனா  இறந்தபோது,  மேஜை  மீது  இருந்த  கடவுள்  படங்களைச்  சிதறடித்து, " கடவுளே  இல்லை "  என்று  கோபம்  காட்டியவர்.  இபபடித்  தனது  வாழ்க்கையின்  ஒவ்வொரு  பக்கத்தையும்  முரண்கள்,  சர்ச்சைகள்,  அதிரடிகளால்  நிரப்பிய  பால்  தாக்கரே,  கடந்த  17-ம்  தேதி  தனது  இறுதி  மூச்சை  நிறுத்திக்  கொண்டதை  நம்ப  முடியாமல்  தவிக்கிறார்கள்  மராட்டிய  மண்ணின்  மைந்தர்கள் !
     போக்குவரத்து  வசதிகள்  நிரம்பியிராத  அந்தக்  காலகட்டத்தில்  அண்ணாவின்  மறைவுக்கு  ஒன்றரைக்  கோடி  பேர்  திரண்டது  கின்னஸ்  ரெக்கார்டு.  ஆனால்,  எந்த  ஆட்சிப்  பொறுப்பிலும்  நேரடியாக  உட்காராத  தாக்கரேவுக்கு  அஞ்சலி  செலுத்த  20  லட்சம்  பேர்  கூடியதும்  ஒரு  ரெக்கார்டுதான்.
-- ஆனந்தவிகடன்.  28 .11 . 2012. 

No comments: