Monday, December 1, 2014

சொல் விளையாட்டு.

  தப்பும்  தவறுமாகப்  பேசி  எக்கச்சக்கமாக  மாட்டிக்கொள்ளும்  போது,  " இல்லையே... நான்  அந்த  அர்த்தத்தில்  சொல்லவில்லையே"  என்று  சமாளிப்பது  நம்  எல்லோருக்கும்  கை  வந்த  கலை.
     அதுவே  புலவர்கள்  என்றால்  சொல்லவே  வேண்டாம்.  அவர்களின்  மொழிப்  புலமையில்  எதை  வேண்டுமானாலும்,  எப்படி  வேண்டுமானாலும்  மாற்றிச்  சொல்லிவிடுவார்கள்.  இதோ  ஒரு  சின்ன  சம்பவம்:
   " வாரும்  ' மட ' த்தடிகளே "  (  மடத்து  அடிகளே  என்பது  பொருள்).  என்கிறார்  வந்தவர்.
     பதிலுக்கு  அவர்,
   " வந்தேன்  ' கல் '  விக்ரகமே "  (  கல்விக்  கிரகமே  என்பது  பொருள்  ). என்கிறார்.  இதைக்  கேட்டதும்  அவரும்  சிரித்துக்கொண்டே,
   " அறிவில்லாதவனே "  ( அறிவில்  ஆதவனே  என்பது  பொருள் ).
என்று  சிலேடையாய்  சொல்கிறார்.
--  தினமலர்  சிறுவர்மலர் . டிசம்பர் , 28, 2012. 

No comments: