Monday, December 8, 2014

ஜொலிக்கிறது 3 ம் பிரகாரம்.

 சிவாலயங்களில்  பிரசித்தி  பெற்றது  ராமேஸ்வரம்  என்றால்,  ராமேஸ்வரம்  கோயிலில்  பிரசித்திப்  பெற்றது  அங்குள்ள  3 ம்  பிரகாரம்  என்றழைக்கப்படும்  நீண்ட  மண்டபம்  ஆகும்.  இந்த  3 ம்  பிரகாரம்,  1740 ம்  ஆண்டு  கட்டப்பட்டது.  2 ஆயிரத்து  400  அடி  நீளம்  கொண்ட  இந்த  3 ம்  பிரகாரத்தில்  ஆயிரத்து  212  தூண்கள்  உள்ளன.
     இத்தூண்களின்  மீதும்,  பிரகாரத்தின் மேல்பகுதியிலும்  கண்னைக்  கவரும்  வகையில்,  வர்ண  ஜாலம்  செய்யும்  ஓவியங்கள்  வரையப்பட்டிருக்கும்.  ராமேஸ்வரம்  கோயிலுக்கு  வரும்  சுற்றுலாப்  பயணிகள்,  இந்த  3ம்  பிரகாரத்தை  பிரமாண்டத்தைக்  கண்டு  லயித்து  நிற்பதுண்டு.
--  தினமலர் .30.12. 2012.  

No comments: