Saturday, November 8, 2014

சதாபிஷேகம்.

   சதாபிஷேகம் நடத்த ஒருவருக்கு எத்தனை ஆண்டு, மாதம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்?
     சதம் என்றால் நூறு.  சதாபிஷேகம் நூறு வயது பூர்த்தியாகி செய்ய வேண்டும் என்பதில்லை.  எண்பது வயது பூர்த்தியாகுதல்,  கொள்ளுப்பேரன் பிறத்தல் அல்லது ஆயிரம் பிறை காணுதல் ஆகிய மூன்றுமே சதாபிஷேகம் செய்துகொள்ளத் தகுதியைத் தருகின்றன.  வளர்பிறையில் மூன்றாம் பிறையைக் காணுவதை சந்திர தரிசனம் என்பர்.  ஒரு ஆண்டுக்கு 13 முறை சந்திர தரிசனம் செய்யலாம்.  நினைவு தெரிந்த நாளிலிருந்து அதாவது நான்கு வயது முதல்  சந்திர தரிசனம் செய்வதாகக் கணக்கிட வேண்டும்.  76 ஆண்டுகல் 10 மாதங்கள் நிறைவடைந்தால் ஆயிரம் முறை சந்திர தரிசனம் செய்த கணக்கு வரும்.  இதனுடன் விடுபட்ட நான்கு வயதையும் சேர்த்துக் கொண்டால் 80 வயது மற்றும் 10 மாதங்கள் நிறைவடைந்த பிறகு ஆயிரம் பிறை கண்ட பேறு கிடைக்கிறதாக ( சந்திரனைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ) எண்ணி சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.  ஜன்ம நட்சத்திரத்தில்தான் செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நல்ல சுபமுகூர்த்த நாளிலும் செய்யலாம்.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் . பக்திமலர். மார்ச்  14 , 2013. 

No comments: