Monday, November 3, 2014

புலியோ புலி

  சிவபெருமானுக்கும் புலிக்கும் தொடர்பு அதிகம். புலி தொடர்பான சில கேள்விகள் இதோ:...
     இது சிவ சஞ்சரியில் உள்ள விடுகதை.
1.  ஒரு புலியைச் சூடினான்.அது என்ன புலி?
2.  ஒரு புலியை உடுத்தினான் அது எந்த புலி?
3.  ஒரு புலியை அணிந்தான் அது எந்தப் புலி?
4.  ஒரு புலி மகிழ ஆடினான் அது எந்தப் புலி?
5.  ஒரு புலிபோன்ற பாதத்தான் அது எந்தப் புலி?
6.  ஒரு புலியைத் தாங்கினான் அது எந்தப் புலி?
விடை:
1. சூடிய புலி அம்புலி ( சந்திரன் ).   2.தருகாவன முனிவர் ஏவிய புலியின் தோலை ஆடையாக அணிந்தான்.  3. சிவன் அணிந்தது புலிநகக் கொன்றை மலர்.
4. சிவன் ஆடக் கண்டு மகிழும் முனிவர் புலிக்கால் முனிவர் ( வியாக்ரபாதர் ).  5. தாமரை போன்ற பாதத்தை உடையவன் புண்டரீகம். மரை -- புலி எனப்
பொருள்படும்.  6. சண்ட- தாண்டவத்தில் புலியை மானைப்போல ஏந்தியாடுவான்.
-- தினமலர் பக்திமலர் . மார்ச் 28,  2013. 

No comments: