Sunday, November 2, 2014

ஐபோனுடன் இணைக்கக்கூடிய வாட்ச்.

 கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள கேசியோ, புளுடூத் மூலமாக ஐபோனுடன் இணையும் வகையில் புதிய வாட்ச்சை அறிமுகப்படுத்தி உள்ளது.
     இந்த புதிய வாட்ச் பல பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்டது. இந்த வாட்ச், இங்கமிங் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் வந்தால் அலர்ட் கொடுக்குமாம்.
     மேலும் போன் பைண்டர் என்ற பெயரில் ஒரு வசதி உள்ளது.  அதன்படி, வாட்ச்சில் உள்ள பட்டனை அழுத்தினால், போனில் அலாரம் அடிக்குமாம். மேலும் ஐபோனுடன் உள்ள இணைப்பு துண்டிக்கும்போது, வாட்ச் வைப்ரேட் ஆகுமாம். இதன் மூலம் போன் திருடுப்போவது மற்றும் தவறி கீழே விழுவதை தவிர்க்க முடியும்.
     இதைத்தவிர, பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் ரெகுலர் அப்டேட்டுகளுக்கு அலர்ட் தருமாம். இதில் உள்ள பட்டனின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஜிபி -5600 ஜிபி -   6900  ஏபி என வகையான மாடல் வாட்சுகளை கேசியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.9,995 ஆகும்.
     இந்த வாட்சின் புளுடூத் ரேஞ் அலவு 2 மீட்டர் வரை இருக்கும் என்றும் 100 நகரங்கள் மற்றும் 35 டைம் சோன் உள்ளடக்கிய உலக நாடுகளில் உள்ள நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி, பகல் நேரத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்தும் வசதி என பல சிறப்பம்சங்களை கொண்டது என்று கேசியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
--- தினமலர் . 11 . 5. 2013. 

No comments: