Wednesday, November 19, 2014

உதவி

" நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டு, அதை அவர்கள் மறுக்கும்போது என்ன நினைப்பீர்கள்?"
" அவர்களுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொள்வேன்.  இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா... ' எனக்கு எதையும் மறுத்தவர்களுக்கு நான் நன்றியுள்ளவானாக இருக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.  ஏனென்றால், அவர்களால்தான் நானே என் காரியங்களைச் சாதிக்க முடிந்தது! ' என்பார் அவர் !"
-- கே.சரஸ்வதி, திண்டல்.

" பணத்தால் ஆத்திகனையும் நாத்திகனையும் சேர்த்து வைக்க முடியுமா?"
" பணத்தால் முடியாதது எதுவும் இல்லை.  இந்தக் கவிதையைப் படியுங்கள்...
   ' வாஸ்து பார்த்துக் கட்டிய வீட்டில்
    நல்ல வாடகை தந்த
   நாத்திகனுக்கு இடம்!' ".
-- ராம்.ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
--- நானே கேள்வி...நனே பதில் !
-- ஆனந்த விகடன்.  22 .5  .2013.  

No comments: