Friday, October 3, 2014

திலஹோமம் - விளக்கம்.

 முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியன சரியாக செய்யாவிட்டாலும், விபத்து, தற்கொலை காரணங்களால் இறந்த முன்னோர்களாலும் சில பாதிப்புகள் அவர்கள் வழிவந்தவர்களுக்கு ஏற்படுகிறது.  முக்கியமாக வம்சவிருத்தி தடைபடுகிறது.  இதற்குத் பரிகாரமாக சில ஹோமம் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இது யமனைக் குறித்து எள்ளினால் செய்யப் படும் யாகம்.  இதனை சமுத்திரம், நதி போன்றவற்றின் கரைகளில்தான் செய்ய
வேண்டும்.  ஏதோ செய்தோம் என்று செய்யாமல், இதற்குரிய மந்திரத்தை நாற்பத்தெட்டாயிரம் முறை ஜபம் செய்தும், இருபத்திதெட்டாயிரம் முறை ஹோமம்
செய்தும், இயன்றவரை தானங்கள் கொடுத்தும் செய்தால் பித்ரு தோஷம் நீங்கி, வம்சவிருத்தி ஏற்படுவதுடன் தரித்திரம் நீங்கி, லட்சுமி காடாட்சம் ஏற்படும். .      
--  மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- . தினமலர் . பக்திமலர் .ஜூன் 6,. 2013. 

No comments: