Saturday, October 25, 2014

' அசர்' போடும் கல்விக் குண்டு !

  Annual Status of Educatin Report  என்பதன் சுருக்கமே அசர் ( ASER ).
    கடந்த ஜனவரி மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு வெளியிட்ட அசர் அறிக்கை,  ' தமிழகத்தில் 35 சதவிகிதம் 5 - ம் வகுப்பு மாணவர்களாலும் 13 சதவிகிதம் 8 - ம் வகுப்பு மாணவர்களாலும் 1 - ம் வகுப்பு, 2 - ம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல்களைக்கூடப் படிக்க முடியவில்ல' என்கிறது.  8 - ம் வகுப்பைச் சேர்ந்த 17 சதவிகித மாணவர்களால் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகளை ( smaall letters )  படிக்க முடியவில்லை.  62 சதவிகித மாணவர்களால் மூவிலக்க எண்களை ஓரிலக்க எண்ணால் வகுத்துக் கூற முடியவில்லை என்றெல்லாம் கல்விக் குண்டுகளைத் தூக்கிபோடுகிறது அசர்.  தமிழகம் மட்டுமல்ல, முழு இந்தியாவின் கதியும் இதுதான்.
--டி.அருள் எழிலன், ஆனந்த விகடன். 1. 5 .2013.    

No comments: