Sunday, October 19, 2014

ஆறு அபிஷேகங்கள் !

அபிஷேகப் பிரியருக்கு ஆறே அபிஷேகம்!
     கோயில்களில் தினந்தோறும் நடைபெறுவன நித்திய பூஜைகள்,  சிறப்பு விழாக்கள் நைமித்திய பூஜைகள் எனப்படும்.
     பழமையான வழிபாட்டுச் சிறப்புப் பெற்ற கோயில்களில் தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடக்கும்.  இவை, முதல்காலம் ( காலை 6 மணி ), காலசந்தி ( காலை 9 மணி ), உச்சிக்காலம் ( 12 மணி ), சாயரட்சை ( மாலை  6 மணி ) , உபசந்தி ( இரவு 8 மனி ) , அர்த்தஜாமம் ( இரவு 9 மனி ) என்பன.
     சிவபெருமானை அபிஷேகப்பிரியர் என்பர்.  எனினும் நடராஜர் திருமேனிக்கு ஓர் ஆண்டில் ஆறே ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடக்கும்.  மற்ற நாட்களில் அபிஷேகம் செய்வதில்லை.  ஆறு அபிஷேக காலங்களூம் தினசரி நடக்கும் ஆறு காலங்களுடன் தொடர்புடையவையே ஆகும்.
முதல் காலம்:
     தேவர்களுக்கு விடியற்காலம் மார்கழி மாதம்.  தட்சிணாயண நிறைவு மாதமான மார்கழி மாதம், திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நடைபெறும்.  பின்னிரவு 3 மனிக்கு அபிஷேகம் கொள்வார்.  பிராத ( முதல் ) காலம் எனப்படும்.  நிதிய பூஜைக்குச் சமமானது இது. ஆறு ஆதார பூஜைகளில் இது மூலாதார பூஜை எனப்படும்.
இரண்டாம் காலம்:
      மாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசி ( 14வது ) திதி அன்று இரவு 7 மணி அளவில் நடைபெறும்.  ஆதாரங்களில் சுவாதிஷ்டான பூஜை.
உச்சிக்காலம்:
      சித்திரை மாதம் திருவோண நட்சத்திர நாளில் நிகழும். இதனை மனிபூரக பூஜை எனலாம்.
சாயுங்கால பூஜை:
      ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாள் இரவில் நடைபெறும்.  ஆனித் திருமஞ்சனம் சாயுங்கால பூஜை.  இது சந்தியாகாலம்.  இது அநாகத பூஜையாகும்.
உபசந்தி காலம்:
      ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்திசி நாள் இரவு 7 மணியளவில் நடைபெறும்.  உபசந்திகால விசுத்தி பூஜையாகும்.
அர்த்தசாமம்:
      புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி இரவு 7 மணி அளவில் நடைபெறும்.  ஆக்ஞா பூஜையான அர்த்த சாம பூஜை எனலாம்.
-- தினமலர். பக்திமலர். ஜூலை 11, 2013. 

No comments: