Wednesday, October 15, 2014

லிப்ஸ்டிக் வேண்டாம்!

 சாதாரணமாக லிப்ஸ்டிக்கில் 9 வகையான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றது.  மனித உடல் சராசரியாக ஏற்றுக்கொள்ளும் அளவை விட 20 சதவிகிதம் அதிகமான அலுமினியம், காட்மியம், ஈயம், மாங்கனீஸ், குடல் புற்றுநோய்க்கு காரணமான குரோமியம் உட்பட பல உலோகங்கள் சேர்க்கப்படுகிறது. மேலும், நீண்ட நாட்கள் நீடிக்கும் வகையில் இதில் சிந்தெட்டிக் ரசாயனம் கலக்கப்படுவதால், இது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது.
     முக்கியமாக கர்ப்பிணி பெண்கள், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை அறவே தவிர்த்தல் நல்லது.  ஏனெனில் இதில் உள்ள ஈயம் மற்றும் பல்வகை ரசாயனங்கள் கர்ப்பப்பையை பாதிப்பதுடன் குழந்தையின் உறுப்புகளையும் சேர்த்து பாதிக்கும்.
      மேலும், உடலுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் டிரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படுகிறது.  இது மூளையில் இருந்து தகவல்களை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை கட்டுப்ப்படுத்தி, உடலின் உள்ளே சென்ற 20 நிமிடத்திலேயே இதய செயல்பாடுகளை படிப்படியாக குறைத்துவிடுகிறது.  இதனால் மாரடைப்பு, படபடப்பு ஏற்பட்டு உடல் உள் உறுப்புகளை செயலிழக்க வைக்கிறது.  லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கிறது ஒரு ஆய்வு.
-- ரா.உ. இந்துமதி,  தினமலர். பெண்கள்மலர். 6 . 7 . 2013. 

No comments: