Saturday, September 6, 2014

சமச்சீர்!

சம்பளக் கவரில்
இருந்து
ஆயிரம் என் வீட்டிற்கு
என்றேன்...
முகம் கறுத்தது
என் கணவருக்கு.
அடுத்த
ஆயிரம் எடுத்து
உங்கள் பெற்றோருக்கு
என்றேன்...
கணவருக்கு
முகம் மலர்ந்தது.
சமச்சீர் உதவியால்
தவிர்க்கப்பட்டது
குடும்ப சண்டை...!
-- க.கலா, காகிதப்பட்டறை.
--  தினமலர். பெண்கள்மலர். 3. 8. 2013. 

No comments: