Thursday, September 4, 2014

ஞானம்.

" ஞானம் எப்போது பிறக்கிறது?"
" எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம்.  குரு, சாகும் தருவாயில் படுத்திருந்தார்.  ' ஐயா, கடைசியாக எனக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?' என்று கேட்டான் சீடன்.  குரு வாயைட் திறந்து காட்டி, ' நாக்கு இருக்கிறதா?' என்றார்.  'இருக்கிறது ' என்றான்,  ' பற்கள்?'  ' இல்லை! '. குரு கேட்டார்,' காரணம் தெரிகிறதா?'  ' தெரிகிறது குருவே!  நாக்கு மென்மையானது.  அதனால் இன்னும் இருக்கிறது.  பற்கள் கடினமானது.  அதனால் உதிர்ந்துவிட்டன!'  ' உனக்கு ஞானம் வந்துவிட்டது' என்றார் குரு!'
-- எஸ்.ராமச்சந்திரன், சென்னை - 49.  ( நானே கேள்வி... நானே பதில் ! ).
--  ஆனந்த விகடன். 19.12.2012.    

No comments: