Tuesday, September 16, 2014

பலாப்பழம் கணக்கு.

  சங்க காலத்தில் எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில்,  பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
' பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
 சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி  -  வருவதை
 ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
 வேறெண்ண வேண்டாஞ் சுளை.'
     விளக்கம்:  பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி,  ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.
--  தினமலர்.சிறுவர்மலர். ஆகஸ்ட் 16, 2013.

No comments: