Sunday, September 14, 2014

கூடியதும், கூட்டாததும்...

   சொல்லக்  கூடியதும்  கூட்டாததும்...
     இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள், பல தகவல்களைச் சொல்லி இருக்கின்றன.
     அவற்றின் படி...
     ஒன்பது தகவல்களை அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது.
1.  பிறந்த நாள்  -  நட்சத்திரம்.
1.  நம்மிடம் உள்ள செல்வம்.
3.  நமக்கு நடந்து வரும் கிரக நிலைகள்.
4.  உண்ணும் மருந்து.
5.  குருநாதர் உபதேசித்த மந்திரம்.
6.  நமக்கு ஏற்பட்ட அவமானம்.
7.  செய்யக் கூடிய தானம்.
8.  கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்னியோன்யம்.
9.  நம்மைப் புகழ்ந்து, பத்துபேர் சொன்ன பாராட்டு வார்த்தைகள்.
     என்னும் இந்த ஒன்பது தகவல்களையும் அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது.  சொன்னால் அதன் மூலம் நமக்கு இடையூறுகள் உண்டாகும்.
     சொல்லக் கூடாத தகவல்களை பற்ரி சொன்ன நமது முன்னோர்கள், சொல்லக் கூடிய தகவல்கள் என நான்கு தகவல்களைச் சொல்கிறார்கள்'
     அவை...
1.  நம்முடையப் பகைவர்களைப் பற்றிய தகவல்கள்.
2.  நோய்.
3.  பசி.
4.  நாம் செய்த பாவம்.
     இவைகளை சொல்வதன் மூலம் அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட வழி பிறக்கும்.
--- ஸ்ந்த்ரானந்தா.
--  தினமலர். வாரமலர். ஆகஸ்ட் 18, 2013. 

No comments: