Saturday, August 9, 2014

சாரமும் சக்கையும்!

   மகான் ஒருவர் ஒருமுறை கடவுளை தியானித்துக்கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த நாத்திகவாதி ஒருவர், ' கடவுள் இல்லை ' என்ற தலைப்பில் எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றை உறையிலிட்டு மகானிடம் கொடுத்தார்.
     கட்டுரையைப் படித்த மகான்,  காகித உறையை மட்டும் வைத்துக் கொண்டு கட்டுரையைக் கிழித்து தூர எறிந்துவிட்டார்.
     நாத்திகவாதி மறுதினம்  அங்கு வந்து, " என் கட்டுரை எப்படி இருந்தது?" என்று கேட்டார்.
    அதற்கு மகான் அவனிடம் காகித உறையைக் காட்டி, " சாரத்தை எடுத்துக் கொண்டு,  சக்கையை எறிந்துவிட்டேன்" என்றார்.
-- நெ.இராமன், சென்னை - 74.
--  குமுதம் பக்திஸ்பெஷல். செப்டம்பர் 1 - 15- 2013.   

No comments: