Friday, August 8, 2014

மூத்த பிள்ளையார்!

  பிள்ளையார் பஞ்சபூத தத்துவத்தினை உள்ளடக்கியவர் என்கின்றன புராணங்கள்.  அவருக்கு உரியதாகக் குறிப்பிடப்படும் மரங்களும் அந்தத் தத்துவத்தை உணர்த்துவதாகவே உள்ளன.  அரச மரம்,  ஆகாயத்தையும்;  ஆலமரம்,  பூமியையும்;  வாதநாராயண மரம்,  வாயுவையும்;  சமீ எனப்படும் வன்னி மரம்,  அக்னி தத்துவத்தையும்;  நெல்லி மரம் அப்பு தத்துவமான தண்ணீரையும் குறிக்கின்றன.
-- ஆர்.ஜெயலட்சுமி, சென்னை - 26.
ஹோம பலன்கள்
     கணபதி ஹோமத்தில் அறுகம்புல் எனப் பல பொருட்களை இடுவார்கள்.  அவற்றால் என்ன பலன்?
     அறுகம்புல் - கெட்ட சக்திகளை அழித்து,  நன்மை தரும்;  கரும்பு - புத்திரப்பேறு கிடைக்கும்;  வாழைப்பழம் - நற்புத்தி, ஞானம் கிட்டும்;  அவல் - புண்ணியம் உண்டாகும்;  தேங்காய் - இல்லத்தில் தானியம் பெறுகும்;  எள் - சனி தோஷம் விலகும்;  வெல்லம் - நோய்கள் குணமாகும்.
-- செ.ரமேஸ், மதுரை - 18.
-- குமுதம் பக்திஸ்பெஷல். செப்டம்பர் 1 - 15- 2013.   

No comments: