Sunday, August 24, 2014

வட, தென் இந்தியா.

 " வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் என்ன ஒற்றுமை?"
     " தென் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்த நிகழ்வு இது.  புதுக்கோட்டை அருகே உள்ள கறம்பக்குடி கருவடதெரு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கலைமணி.  இவர் ஒரு தலித் பெண்.  குடியரசு தினத்தன்று கலைமணி தேசியக் கொடி ஏற்ற முற்பட்டபோது, ' ஒரு தலித் பெண் தேசியக் கொடி ஏற்றுவதா?  என்று ஆதிக்கச்சாதிக்காரர்கள் அடித்து உதைத்து இருக்கிறார்கள்.
       குடியரசு தினத்தில் இருந்து நான்கு நாட்கள் கழித்து மத்தியப்பிரதேசத்தில் நடந்த சம்பவம் இது.  பகார் பங்களா என்ற கிராமத்தைச் சேர்ந்த தலித் இளஞர் ஜெகதீஷ், தன் நிலத்தில் இருந்த மின்சார மோட்டார் திருடு போனதால் மூன்று பேர் மீது சந்தேகப் புகார் அளித்துள்ளார்.  அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ஜெகதீஷின் கை, கால்களைத் கோடரியால் துண்டித்து உள்ளனர்.  நம்புங்கள் இந்தியா ' குடியரசு நாடு '!
-- மா.குணசேகரன், கும்பகோணம்.
-- நானே கேள்வி... நானே பதில்!    ஆனந்த விகடன். 22.2.2012.

No comments: