Sunday, July 6, 2014

நாமம் !

நாமம் என்று பெயர் வந்தது ஏன்?
     நாம் ஒருவருக்கொருவர் கலாச்சாரத்தை அனுசரித்து திருநீற்றையோ திருமண்னையோ இடவேண்டும்.  திருமண் இடுவதற்கு ' நாமம் போடுவது' என்கிறார்கள்.
    மகாவிஷ்ணுவுக்கு கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிகம, வாமன, ஸ்ரீதர, ஹிருஷிகேச, பத்மநாப, தாமோதர என்று பன்னிரண்டு நாமங்கள் முக்கியம்.
    இந்த துவாதச நாமங்களைச் சொல்லி 12 இடங்களில் திருநாமங்களை இட்டுக் கொள்வார்கள்.  இப்படி பகவத் நாமத்தைச் சொல்லி போட்டுக் கொள்வதாலேயே ' நாமம் போடுவது ' என்று பெயர் வந்துவிட்டது.
-- ( காஞ்சி பெரியவர் உபன்யாசத்திலிருந்து... )  அனிதா.
--குமுதம் பக்தி ஸ்பெஷல். செப்டம்பர்  16 -- 30 , 2013.  

No comments: