Monday, July 28, 2014

அப்பா...

தவமிருந்து
என்னைப் பெற்றதையும்
கை பிடித்து
பள்ளிக்கு அழைத்து சென்றதையும்
தேர்த் திருவிழாவில்
கேட்டவற்றை வாங்கித் தந்ததையும்
பால்யம் மாறினாலும்
சினேகிதனாய் அரவணைத்ததையும்
இலக்கியம் முதல்
விளையாட்டு, காதல் வரை
வரம்பு மீறாமல் பேசி மகிழ்ந்ததையும்
நினைத்து, நினைத்து அழ
ஏராளமிருந்தும்
பாழாய் போன நாகரிகம் கருதி
பொங்கி வரும் அழுகையை
விசும்பல்களுக்கிடையே
அடக்கினேன்...
அப்பாவின் சடலம் பார்த்தபடி...!
-- இரா.கமலக்கண்ணன்,  சித்தோடு.
-- தினமலர் வாரமலர். செப்டம்பர் 1, 2013  

No comments: